” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி 175.

தீயில் எரியும் எம் தீவு.

தீராத நோய் போல்
தீயும் தொடருது எம்தீவில்
சீதையிட்ட சாபம் அன்று
தமிழரின் சாபம் இன்று.

பாலனின் வயிற்று பசி
பாத்த தாய்க்கு வயிற்றில் தீ
பற்றி எரிந்தது நம் தீவு.

எத்தனை முறை தமிழரை
துரத்தி அடித்தனர்
தமிழரின் சொத்து
அபகரித்தனர்,
தமிழரின் உடைமைகள்
தீயில் மனமும் வெந்தது.

உடுத்த உடுப்புடன்
ஊர் திரும்பினர்
காடையர்
விரட்டி அடித்தனனே!

பதவி ஆசையில் பலகோடி
திருட்டு
பாலுக்கு காவல்
திருட்டுபூனைகள்
பத்திரமாய் முதலீடுகள் பற்பல நாடுகளில் சொத்து, வெள்ளைவேட்டி மகிந்தா
குடும்பம்.

பொறுத்த போதும் என்று
பொங்கி எழுந்தனர்
பொசுங்கியது நம் தமிழர்
தீவு
புதிய விடியல் புதிதாய்
பிறந்திடும்

பாவை அண்ணா க்கும் அதிபருக்கும் இரவு வணக்கம் .
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan