மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி 175.

தீயில் எரியும் எம் தீவு.

தீராத நோய் போல்
தீயும் தொடருது எம்தீவில்
சீதையிட்ட சாபம் அன்று
தமிழரின் சாபம் இன்று.

பாலனின் வயிற்று பசி
பாத்த தாய்க்கு வயிற்றில் தீ
பற்றி எரிந்தது நம் தீவு.

எத்தனை முறை தமிழரை
துரத்தி அடித்தனர்
தமிழரின் சொத்து
அபகரித்தனர்,
தமிழரின் உடைமைகள்
தீயில் மனமும் வெந்தது.

உடுத்த உடுப்புடன்
ஊர் திரும்பினர்
காடையர்
விரட்டி அடித்தனனே!

பதவி ஆசையில் பலகோடி
திருட்டு
பாலுக்கு காவல்
திருட்டுபூனைகள்
பத்திரமாய் முதலீடுகள் பற்பல நாடுகளில் சொத்து, வெள்ளைவேட்டி மகிந்தா
குடும்பம்.

பொறுத்த போதும் என்று
பொங்கி எழுந்தனர்
பொசுங்கியது நம் தமிழர்
தீவு
புதிய விடியல் புதிதாய்
பிறந்திடும்

பாவை அண்ணா க்கும் அதிபருக்கும் இரவு வணக்கம் .
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan