நகுலா சிவநாதன்

முடியும் என்று முனைந்தால்…….

கற்று கொள்வாய் மனிதா
காலம் உன்னைக் கண்டுகொள்ளும்!
பெற்றுக் கொள்ளும் அறிவு
பெருமை சொல்லும் உலகினிலே
உற்றுக் கேட்டுப் படித்தால்
உலகே வென்று வாழ்ந்திடலாம்!
பற்றுக் கொண்டு வாழ்ந்தால்
பாரே பெருமை பேசிடுமே!
முடியும் மென்று முனைந்தால்
முயற்சி என்றும் பலனாகும்
விடியும் நாளும் வருமே
விளைவும் உயர்வு தந்திடுமே
மடியில் பிள்ளை தவழும்
மனத்தில் மகிழ்வு மலர்ந்திடுமே
குடியில் மாண்பு கொழிக்கும்
கூடி மகிழ்வு நிலைத்திடுமே

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading