மாற்றத்தின் ஒளியாய்

இரா.விஜயகௌரி மாற்றத்தின் ஒளியாய் மனங்களுள் தெளிவாய் ஏற்றத்தின் படியாய் துலங்கிடும் எழிலே காலத்தின் மாற்றம் கனிந்திடும் பொழுதில் தொடுத்திடும்...

Continue reading

நகுலா சிவநாதன்

நூல்கள்

வண்ண நூல்கள் கற்றிட்டே
வாழ்வில் என்று உயர்வோமே
எண்ணம் யாவும் எழிலறிவு
ஏற்றம் பெற்றே மிளிர்வோமே
கண்ணில் காணும் நன்நால்கள்
கவிதைக் கலையை வளர்த்திடுமே
திண்ண மாக உலகினிலே
திடமாய் வென்று புகழாவோம்

நூல்கள் என்னும் ஆயுதமே
நுணுகிக் கற்கும் வேலாகும்
தாள்கள் கொடுக்கும் வண்ணச்சுகம்
தளிர்க்கும் செம்மை மொழியறிவு
வேல்கள் போலே கூர்மையாலே
வென்று வாழ்வில் நிலைத்திடவே
கால்கள் போலே நடைபயின்று
கணணித் தமிழாய்ப் படித்திடுக!

நகுலா சிவநாதன்1716

Nada Mohan
Author: Nada Mohan