புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

நகுலா சிவநாதன்

ஆற்றல்

பொங்கும் புதுமை மேலோங்க
பொலியும் ஆற்றல் புகழ்மேவ
எங்கும் பசுமை விரித்தாட
எழிலாய் வறுமை அகன்றிடுமே
தங்க குணமே கொண்டோரை
தரணி போற்றும் புவிமேலே
திங்கள் போலே நீயிருந்தால்
திலகம் மாக ஒளிமேவும்

ஆற்றல் ஒன்றே அகிலத்தில்
அனைத்தும் திறமை வளர்த்திடுமே
ஊற்றாய் எண்ணம் உலகாள
உரமாய் சீர்மை நிலைத்திடுமே
நாற்றாய்க் கலைகள் வளர்ந்தோங்க
நதியாய் பெருகும் நுண்ணறிவு
போற்றி நாமும் பொழுதெல்லாம்
பொன்போல் அறிவை தேக்கிடுவோம்.

கற்ற கல்வி கணக்கின்றி
காலம் வரையும் கணக்கினிலே
உற்ற காலம் படித்துநாமும்
உயர்வாய் மதிப்பைப் பெற்றிடுவோம்
பெற்ற பெருமை உலகினிலே
பேதம் இன்றி தளிர்த்திடவே
நற்ற தவமாய் கற்றைநெறி
நயமாய் ஆற்றல் செதுக்கிடுமே

நகுலா சிவநாதன் 1718

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading