16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
நகுலா சிவநாதன்
ஆற்றல்
பொங்கும் புதுமை மேலோங்க
பொலியும் ஆற்றல் புகழ்மேவ
எங்கும் பசுமை விரித்தாட
எழிலாய் வறுமை அகன்றிடுமே
தங்க குணமே கொண்டோரை
தரணி போற்றும் புவிமேலே
திங்கள் போலே நீயிருந்தால்
திலகம் மாக ஒளிமேவும்
ஆற்றல் ஒன்றே அகிலத்தில்
அனைத்தும் திறமை வளர்த்திடுமே
ஊற்றாய் எண்ணம் உலகாள
உரமாய் சீர்மை நிலைத்திடுமே
நாற்றாய்க் கலைகள் வளர்ந்தோங்க
நதியாய் பெருகும் நுண்ணறிவு
போற்றி நாமும் பொழுதெல்லாம்
பொன்போல் அறிவை தேக்கிடுவோம்.
கற்ற கல்வி கணக்கின்றி
காலம் வரையும் கணக்கினிலே
உற்ற காலம் படித்துநாமும்
உயர்வாய் மதிப்பைப் பெற்றிடுவோம்
பெற்ற பெருமை உலகினிலே
பேதம் இன்றி தளிர்த்திடவே
நற்ற தவமாய் கற்றைநெறி
நயமாய் ஆற்றல் செதுக்கிடுமே
நகுலா சிவநாதன் 1718
Author: Nada Mohan
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...
18
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாரம் போனது தெரியாது
வருஷம் ஆனது புரியாது
350 ஆம் வாரம் சொரிந்து
முழுமூச்சாய் மெருகூட்டி
மனமோ...