நகுலா சிவநாதன்

எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே!

ஆணிவேரே அமுதத் தமிழே!
பேணி நாமும் வளர்க்கும் செந்தமிழே
தேசத்தின் பரம்பலாய் பாரை ஆழ்கிறாய்
பாசமாய் எம்முடன் பாலமாய் ஒட்டகிறாய்

எழுத்தின் வித்தாய் எண்ணத்தின் முத்தாய்
ஏற்றத்தின் சிகரமே தாய்தமிழ் நீதானே!
எழுத்தாளர் வாரம் எடுத்துச்செல்லும்
எண்ணத்தின் முகிழ்ப்பே வெற்றியின் தூணே!

எழுத்தில் பூத்து எண்ணத்தில் விரிந்து
எழுகடலும் புகுத்தும் எண்ணிறை மொழியே
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் புகழுடன் என்றும்
நின்று நிழலாடும் தாய்த்தமிழே வாழி
விழுதாக விருட்சமாக வியாபிக்கும் எம்மொழியே
ஊடக எழுத்தாய் காணொளி படைப்பாய்
என்றும் கமிழட்டும் எழிலாய் ஓங்கட்டும்

நகுலா சிவநாதன்1725

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading