29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
சித்திரையாளே! வருக!
எங்கும் தமிழே மணக்க
எழிலாய் வருக சித்திரையாள்!
பொங்கும் எண்ணம் பூரிக்க
பொழிவாய் புலர்வாய் புத்தாண்டே!
மங்கா சிந்தை மனத்திலே
மாட்சிமை தரவே வந்திடுவாய்!
தங்கும் செல்வம் நிலைக்க
தடைகள் உடைத்து வந்துவிடு நீ
உழவன் வாழ வழிவிடு
உழைப்போர் சிறக்க அருளிடு!
வறுமை ஒழிக்க வாழ்வு கொடு
வளங்கள் பெருக்க நலங்கள் கொடு!
திறமை வளர முயற்சி கொடு
தீமை அழிய நற்பலம் கொடு
கதிரவன் ஒளிர கடமைகள் பெருக
காரிருள் அகல ஊரது சிறக்க
பொங்கும் பொலிவும் தந்திடு சித்திரையே!
நகுலா சிவநாதன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.