அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

நகுலா சிவநாதன்

மீளெழும்காலம்

கறைபடிந்த போரின் தாக்கம்
கலகங்களையும் ஏக்கங்களையும்
காவியே வடுக்களாய்த் தந்தது
செய்வறியாது திகைத்து
எழுந்த கணங்கள்
சேதிகள் பலவற்றை
கேள்விகளாக்கின!

இன்னமும் அகதியாய்
இருட்டறைகளுக்குள்
மீளெழும் காலம் எப்போ?
ஏதிலிகளாய் நாடு நாடாய்
அலைவின் தொடர்கதையே!

மீளெழும்காலம் எப்போ?
மிகுதி காலம் வாழ்வா? சாவா?
ஏக்கப் பெருமூச்சு தாக்கமாய்!

மீண்டும் ஒரு அகதி வாழ்வு வேண்டாம்
தீண்டும் எண்ணங்களுடன்
திசை தெரியா வழிகளுக்குள்
திக்குமுக்காடும் வாழ்வு
இனியும் வேண்டாம்!!

நகுலா சிவநாதன்1676

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading