முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும்...

Continue reading

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

நகுலா சிவநாதன்

மீளெழும்காலம்

கறைபடிந்த போரின் தாக்கம்
கலகங்களையும் ஏக்கங்களையும்
காவியே வடுக்களாய்த் தந்தது
செய்வறியாது திகைத்து
எழுந்த கணங்கள்
சேதிகள் பலவற்றை
கேள்விகளாக்கின!

இன்னமும் அகதியாய்
இருட்டறைகளுக்குள்
மீளெழும் காலம் எப்போ?
ஏதிலிகளாய் நாடு நாடாய்
அலைவின் தொடர்கதையே!

மீளெழும்காலம் எப்போ?
மிகுதி காலம் வாழ்வா? சாவா?
ஏக்கப் பெருமூச்சு தாக்கமாய்!

மீண்டும் ஒரு அகதி வாழ்வு வேண்டாம்
தீண்டும் எண்ணங்களுடன்
திசை தெரியா வழிகளுக்குள்
திக்குமுக்காடும் வாழ்வு
இனியும் வேண்டாம்!!

நகுலா சிவநாதன்1676

Nada Mohan
Author: Nada Mohan