நகுலா சிவநாதன்

தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி

நாடும் நசுக்கும் நம் மக்கள் கூட்டம்
தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி
மூடும் கதவுகளும் முனைப்பாய் இறுக்க
ஆடும் ஆட்டங்களும் அரசியல் சதுரங்கமே!

தேங்கிய வலிகள் தேசத்தை நோக்க
தாங்கும் விழிகள் வரவை எதிர்பார்க்க
துாங்கா இரவுகள் துரத்தும் வேளை
நீங்கா வாழ்வாய் நித்தம் போராட்டம்

தேடும் விழிகளில் தேனாய் ஆறு
கூடும் கூட்டங்களும் அவன் வருவானா?
பாடும் குருவிகளும் அவளைக் கண்டாயா?
பறக்கும் மனமோ இயந்திர வேகமாய்!
அவன் வருவானா??

நகுலா சிவநாதன்1688

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading