” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நகுலா சிவநாதன்

தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி

நாடும் நசுக்கும் நம் மக்கள் கூட்டம்
தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி
மூடும் கதவுகளும் முனைப்பாய் இறுக்க
ஆடும் ஆட்டங்களும் அரசியல் சதுரங்கமே!

தேங்கிய வலிகள் தேசத்தை நோக்க
தாங்கும் விழிகள் வரவை எதிர்பார்க்க
துாங்கா இரவுகள் துரத்தும் வேளை
நீங்கா வாழ்வாய் நித்தம் போராட்டம்

தேடும் விழிகளில் தேனாய் ஆறு
கூடும் கூட்டங்களும் அவன் வருவானா?
பாடும் குருவிகளும் அவளைக் கண்டாயா?
பறக்கும் மனமோ இயந்திர வேகமாய்!
அவன் வருவானா??

நகுலா சிவநாதன்1688

Nada Mohan
Author: Nada Mohan