சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நகுலா சிவநாதன்

வழிகாட்டிகள்

கற்றல் ஒன்றே உயர்வுதரும்
கற்றுக் கொடுக்க மேன்மைவரும்!
பற்றுக் கொண்டு தமிழ்மேலே
படித்தல் என்றும் நலமாகும்!
உற்றுக் கேட்டே உணர்ந்தாலே

உலகில் பெருமை பெற்றிடலாம்
கற்றுக் கொண்டே இருந்தாலே
காலம் உன்னை வாழ்த்திடுமே!

ஆண்டு பலவாய்க் கற்பித்தே
ஆசை துறந்து பயிற்றுவித்தோம்
வேண்டும் புதுமை படைத்திட்டே
வேராய் அறிவை யூட்டிநின்றோம்
தாண்டுங் காலம் தடையின்றித்
தமிழே அறமாய்க் கொடுத்திட்டால்
நீண்டு வாழும் திறன்பெற்றுப்
நிலையாய்ப் புவியில் வாழ்ந்திடலாம்

நகுலா சிவநாதன் 1734

Nada Mohan
Author: Nada Mohan