தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

நகுலா சிவநாதன்

ஒளியின்றி ஒளிர்வெங்கு

கதிரவன் ஒளியாலே கவலைகள் பறந்தோடும்
பதியதன் பெருமை யாவும்
பகல்போல நிலவாகும்
உதிரத்தின் உணர்வெல்லாம்
ஊற்றாக மிளிர்ந்திடும்
வதியுமிடம் வண்ணமாய் வளமுடனே
ஒளிர்வுபெறும்

நதிபோல ஒளிபரப்பு நாநிலமும் பரந்திட
கதியாக வெளிச்சமும் கண்களை மயக்கிடும்
ஒளியின்றி ஒளிர்வெங்கு நிலைக்கும்
மதியாலே மானிடமும் மங்காமல் ஒளிரும்

ஒளியின்றி ஒளிராது நம்வாழ்வு
வழியின்றி வாழ்க்கையும் நகராது
பழியின்றி நம்பயணம் பாடுகளாய் நகர
வழியொன்று வேண்டுமே வளமான ஒளியாலே!

நகுலா சிவநாதன் 1738

Nada Mohan
Author: Nada Mohan