சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

” நகைப்பானதோ மனிதநேயம் “

ரஜனி அன்ரன்“ நகைப்பானதோ மனிதநேயம் “ 11.12.2025

ஏற்றத்தாழ்வுகள் அகல வேற்றுமைகளும் ஒழிய
நல்லிணக்கம் சிறக்க நியாயங்கள் பிறக்க
அமைதியை நிலைநாட்ட அமுலானதே மனிதநேயம்
இன்றோ இனம் மதம் மொழியென்று
இறுகிக் கிடக்கிறது மனங்கள்
மண்டியிடுகிறது மனிதநேயம் !

அன்பு என்பது அலங்காரப் பொருளாக
அறமென்பது வெறும் அறிக்கையாக
அனர்த்தங்களின் போது வேடிக்கை பார்ப்பது
ஒருவரின் வேதனையில் மற்றவர் சிரிப்பது
தியாகத்தின் பெருமையினைக் கொச்சைப் படுத்துவதென
சமூகவலைத் தளங்களில் பேசுபொருளாகவும்
இடர்பாடுகளிலும் நகைப்பாகுதே மனிதநேயம் !

ஆனாலும் இயற்கையின் சீற்றத்திலும் இடிபாடுகளிலும்
சிக்கித்தவித்தோரை சீக்கிரமாய் மீட்டெடுத்து
தம்முயிரையே பணயம் வைத்து உறவுகளை மீட்ட
உன்னதநேயம் மிக்கவர்களை நினைக்கையில்
இன்னமும் மனிதநேயம் உயிர்ப்போடு இருப்பதை
உணரமுடிகிறது எம்மால் !