மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நகைப்பானதோ மனித நேயம்

நேசமற்ற மனிதர்களின்
நெஞ்சத்துள் சிறையாகி
நியாயமற்ற செயல்களினால்
நகைப்பானதோ மனித நேயம்

அழுகுரலை தனதாக்கி
அகம் நிறைத்து செயல்களாற்றி
தாய்மை கொள் வாஞ்சையுடன்
வாழ்ந்ததெல்லாம் கனவாச்சோ

விதைத்தெழுந்த போர்ச்செடியின்
களைபிடுங்கும் கொலைவெறிகள்
குருதியிலே விருந்து வைக்கும்
கூட்டமிங்கே. தலைமைகளாம்

கன்றிற்காய் உயிர் களைந்தான்
முல்லைக்கே. தேரீந்தான்
கனிவினிலே. வாழ்வு தந்த – எங்கள்
நேசத்தை ஏன் களைந்தோம்

விஷத்தை இங்கு மருந்தென்று
தித்திப்பாய் உண்பதுவோ
நம் இதயத்து அணுக்களெல்லாம்
மனித் நேயத்தை விதைத்தெழுவோம்

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading