பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

நக்தி சக்திதாசாசன்

நினைவினிலே ஒரு சாரல்
எண்ணங்களில் ஒரு கீறல்
ஞாபகங்களில் ஒரு தூறல்
நெஞ்சினிலே ஒரு தேறல்

நேற்றைகள் தந்த நினைவுகள்
இன்றையில் நீந்தும் கனவாக
நாளையில் சுரந்திடும் நிஜமாக
நனைந்திடும் ஞாபக மழையாக

பிறந்திட்ட மண்ணின் வாலிபம்
மறந்திட்ட வாசத்தின் சுகந்தம்
சுரந்திட்ட வாழ்க்கை அனுபவம்
நிறைந்திட்ட புலத்தின் கோலங்கள்

வாழ்க்கைப் படகு மிதந்திடும்
சேர்க்கை உறவுகள் கலந்திடும்
மார்க்கம் தேடியே ஓடிடும்
தீர்க்கம் காட்டியே வரைந்திடும்

புரிந்திடின் வாழ்க்கை இரகசியம்
வருந்திடின் நிகழ்வுகள் அதிசயம்
பறந்திடும் காலத்தின் சூட்சுமம்
திறந்திடும் மனதின் கதவுகள்

Nada Mohan
Author: Nada Mohan