” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நக்தி சக்திதாசாசன்

நினைவினிலே ஒரு சாரல்
எண்ணங்களில் ஒரு கீறல்
ஞாபகங்களில் ஒரு தூறல்
நெஞ்சினிலே ஒரு தேறல்

நேற்றைகள் தந்த நினைவுகள்
இன்றையில் நீந்தும் கனவாக
நாளையில் சுரந்திடும் நிஜமாக
நனைந்திடும் ஞாபக மழையாக

பிறந்திட்ட மண்ணின் வாலிபம்
மறந்திட்ட வாசத்தின் சுகந்தம்
சுரந்திட்ட வாழ்க்கை அனுபவம்
நிறைந்திட்ட புலத்தின் கோலங்கள்

வாழ்க்கைப் படகு மிதந்திடும்
சேர்க்கை உறவுகள் கலந்திடும்
மார்க்கம் தேடியே ஓடிடும்
தீர்க்கம் காட்டியே வரைந்திடும்

புரிந்திடின் வாழ்க்கை இரகசியம்
வருந்திடின் நிகழ்வுகள் அதிசயம்
பறந்திடும் காலத்தின் சூட்சுமம்
திறந்திடும் மனதின் கதவுகள்

Nada Mohan
Author: Nada Mohan