15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்……..
ரஜனி அன்ரன்
நினைப்பதெல்லாம்…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 20.02.2025
நினைவென்ற ஒன்று இல்லாவிடில்
கனவுகளுக்கும் அர்த்தமென்று எதுவுமில்லை
கனவு காண்பதும் கற்பனையில் மிதப்பதும் கனவாகிட
நினைவு மட்டுமே நமக்காகிட
நடப்பதும் விடுவதும் ஆண்டவன் செயலே
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
அதிசயமே அதிசயம் தான்
ஆச்சரியம் பூச்சொரிய
ஆகாயம் குடை விரிக்கும் !
எண்ணங்கள் சிறகடிக்க ஏற்றங்கள் வலுவாக
வண்ணங்களால் வாழ்வு வளம் கொழிக்க
நினைப்பதெல்லாம் நிகழ்ந்து விட்டால்
வாழ்க்கைப் பாதையும் மாறிட
வாழ்வே சொர்க்கமாகி வனப்பாகுமே !
நிறைவேறா ஆசைகளும் நிறைவேறும்
கறை படிந்த மனசுகளும் கலகலக்கும்
நித்திலமும் புத்தெழிலைப் பெற்றிடும்
நீல வானத்தையும் தொட்டிடலாம்
கால நதியினிலும் நீந்திடலாம்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் !

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...