இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்……..

ரஜனி அன்ரன்

நினைப்பதெல்லாம்…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 20.02.2025

நினைவென்ற ஒன்று இல்லாவிடில்
கனவுகளுக்கும் அர்த்தமென்று எதுவுமில்லை
கனவு காண்பதும் கற்பனையில் மிதப்பதும் கனவாகிட
நினைவு மட்டுமே நமக்காகிட
நடப்பதும் விடுவதும் ஆண்டவன் செயலே
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
அதிசயமே அதிசயம் தான்
ஆச்சரியம் பூச்சொரிய
ஆகாயம் குடை விரிக்கும் !

எண்ணங்கள் சிறகடிக்க ஏற்றங்கள் வலுவாக
வண்ணங்களால் வாழ்வு வளம் கொழிக்க
நினைப்பதெல்லாம் நிகழ்ந்து விட்டால்
வாழ்க்கைப் பாதையும் மாறிட
வாழ்வே சொர்க்கமாகி வனப்பாகுமே !

நிறைவேறா ஆசைகளும் நிறைவேறும்
கறை படிந்த மனசுகளும் கலகலக்கும்
நித்திலமும் புத்தெழிலைப் பெற்றிடும்
நீல வானத்தையும் தொட்டிடலாம்
கால நதியினிலும் நீந்திடலாம்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் !

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading