நிலா முற்றம்..

வசந்தா ஜெகதீசன்
நிலா முற்றம்…
முற்றமது ஒளிருமே
முழு உறவும் கூடுமே
கூட்டாஞ் சோறு குதூகலம்
கூடிப் பேசும் கும்மாளம்
பாட்டன் பாட்டி கதை கூறும்
நிலாச் சோறு நிதமாகும்

விளையாட்டு திடலாகும்
விருப்பமாய் பொழுதோடும்
நிலா முற்ற பண்பாடு
நிதம் எம்மை புடமாக்கும்

ஊரவரும் உறவுகளும் கூடிடும் அரங்கமிது
விழாக்கால ஏற்பாட்டில்
விதவிதமாய் விளையாட்டில் நிலா முற்றம் ஆரவாரம்
நினைத்தாலே இனிக்கிறது நிதம் மனம் கணக்கிறது
அது போல பொற்காலம்
ஆகுமா வருங்காலம்.
நன்றி மிக்க நன்றி

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading