நிழலாடுதே நினைவாயிரம்..

வியாழன் கவிதை நேரத்துக்காக..
கவி இலக்கம்-2280
நிழலாடுதே நினைவாயிரம்..!!

நிறைவாகா நிஜ வாழ்விலே
நிழலாடும் நினைவுகள் ஆயிரம்
உறைந்து போகும் பனியாய்
உணர்வுக்குள் இறுகியதாய்..

பட்டாம் பூச்சி வாழ்வின் வட்டமாய்
பாயும் புலியின் வீரத் தெறிப்பாய்
பூவிரித்த சோலை வண்ணமாய்
எத்தனையோ நினைவுகள் இங்கே

பூட்டுப் போட்டே அடைத்து விடாது
மீட்டுத் தருமே முன்னோக்கியதாய்
மறப்பினுக்கு வசப்படா மார்க்கம்
இறப்பு ஒத்த துயர் ஈணும் இதுவும்..

காதல் கூட ஈடிணை யில்லா
காலத்தின் ஓட்டத்தில் கரையா
வம்பிழுக்கும் வாய் மொழி தரும்
மூளை நரம்பினிலே இசை தரும்..
சிவதர்சனி இராகவன்
29/1/2026

Author:

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading