சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நேவிஸ்பிலிப்

வியாழன் கவிதை (58). 28/04/22
வேண்டும் வலிமை
வலிய வந்த வலிகளோடு
வருந்தி வாடும் மானிடரே
வலியே வாழ்க்கையென
மனமுடைந்து போகாதீர்

உணர்வற்றுக் கிடப்பது உடலேயன்றி
உள்ளுணர்வில்லை தெளிவீர்
குருதி உம்மில் உறைந்தாலும்
உறுதி என்றும் நிலைத்திருக்க

குன்றி விடா மனோபலமும்
குன்றா வலிமையும் கொண்டு
தெளிவான பாதையிலே
பயணங்கள் இனிதாகட்டும்

அவதிப் படும் நெஞ்சுக்கு ஆறுதலாய்
நிம்மதி இழந்த கண்ணுக்கு நித்திரையாய்
சிறகிழந்த பறவைக்கு ஆகாயமாய்
இருக்குது வலிமை மறந்திடாதீர்.

காலம் கை கூடும் வலிமை இருப்பின்
கவலைகள் எங்கோ மறைந்தோடும்
தோல்விகள் படியாகி ,வெற்றிகள் குறியாக
வேண்டும் வலிமை என்றும் வேண்டும் மன வலிமை.
.

Nada Mohan
Author: Nada Mohan