” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நேவிஸ்பிலிப்

வியாழன் கவிதை (58). 28/04/22
வேண்டும் வலிமை
வலிய வந்த வலிகளோடு
வருந்தி வாடும் மானிடரே
வலியே வாழ்க்கையென
மனமுடைந்து போகாதீர்

உணர்வற்றுக் கிடப்பது உடலேயன்றி
உள்ளுணர்வில்லை தெளிவீர்
குருதி உம்மில் உறைந்தாலும்
உறுதி என்றும் நிலைத்திருக்க

குன்றி விடா மனோபலமும்
குன்றா வலிமையும் கொண்டு
தெளிவான பாதையிலே
பயணங்கள் இனிதாகட்டும்

அவதிப் படும் நெஞ்சுக்கு ஆறுதலாய்
நிம்மதி இழந்த கண்ணுக்கு நித்திரையாய்
சிறகிழந்த பறவைக்கு ஆகாயமாய்
இருக்குது வலிமை மறந்திடாதீர்.

காலம் கை கூடும் வலிமை இருப்பின்
கவலைகள் எங்கோ மறைந்தோடும்
தோல்விகள் படியாகி ,வெற்றிகள் குறியாக
வேண்டும் வலிமை என்றும் வேண்டும் மன வலிமை.
.

Nada Mohan
Author: Nada Mohan