” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(105) 8/06/23
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே
**********************************
பொதிகை மலைத் தென்றலிலே
பூத்தெழுந்த தமிழே
‘அ’ எழுத்தை வித்தாக்கி
தொகுத்தெடுத்த எழுத்துக்கள்

செந்தமிழ் சொற்றொடராய்
பாரெங்கும் பரவி வரும் தமிழ் மொழி
புலம் பெயர் சிறார்களால்
ஒத்திசையாய் இணைந்திருந்தே

பாமுகத்தில் தொடர்ந்து வர
எட்டுத்திக்கும் தமிழ்மணம்
கொட்டும் முரசொலியாய்
புவியெங்கும் முழங்கிடுதே

ஊக்கமாய் ஆக்கங்கள்
தேக்கம் காணா பிரளயமாய்
ஊற்றெடுத்து பெருகிடவே
சுதந்திர தமிழ் மணமெங்கும் கமழ்ந்திடுதே

அழிவில்லை யென்றும்
தாய் மொழியாம் தமிழுக்கே
அடுத்த தலைமுறைக்கும்
வளர்த்து வரும் பாமுகம்
வாழ்க வாழ்க என்றும் வாழவே,,!!!!!!
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan