அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

நேவிஸ் பிலிப்

வியாழன் கவிதை இல (55) 31/03/22
மூத்தோர் மாண்பு போற்றுவோம்.

பாரம்பரியத்தை வாழ்ந்து
அமுதோடு பண்பாடும் ஊட்டி வளர்த்து
விழுதுகளாய் நாம் வளர
காரணமாய் இருந்த வேர்கள்.

பதறாது காரியமாற்றி
சிதறாது சேமித்து வைத்து
சிக்கனமாய் செலவு செய்து
பக்குவமாய் வாழ்ந்து எம்மை

கரை சேர்க்கும் தோணியாய்
உயர் நிலை அடைய ஏணியாய்
மணம் வீசத் தேய்ந்த சந்தணமாய்
தியாக சின்னமாய் ஒளிர்ந்த எம் மூத்தோர்

மதிப்பு மிக்க பெரியோரை
அவமதிக்க மாட்டோம்,
கண்மணி போல் காப்போம்
மனம் நோகப் பேசோம்.

மூத்தோர் வாழும் வீட்டில்
நடமாடும் தெய்வத்தின் பாதச் சுவடிகள்
நாளும் பணிந்து வாழ்வோம்,
நன்றியோடு போற்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading