பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

நேவிஸ் பிலிப்

வியாழன் கவிதை இல(56)
அரங்கேற்றம்

கல்வாரிக் குன்றினிலோர் கோரக் காட்சி
கண்டோர் பதை பதைத்துச் சொல்லும் சாட்சி
அந்தரத்தில் தொங்குகின்றார் பரமனங்கே
மூன்றாணிப் பிணையலோடு சிலுஙையிலே

செந்நீரில் குளித்தவராய் கரங்கள் நீட்டி
சிறகுதனை விரித்ததொரு பறவை போலும்
வந்த பணி முடிந்ததென்ற நிறைவோடு
மென்னகையாய் விழியசைத்துத் தலை சாய்க்க

கரு மேகம் திரண்டங்ஙே சூழ்ந்திருக்க
கதிரவனும் ஒழியிழந்து மறைந்தே போக
கல்குன்று மலர்களும் மணம் துறக்க
கல்வாரித் தென்றலே நீ சோர்ந்ததேனோ

மின்னலடி ஒசையுடன்
கற் தளங்கள் அதிர்ந்தொலிக்க
பகலே இரவாய் மாறிப் போக
இயற்கையுமே இயக்கமின்றிப் போனதுவே

மன்னுயிர்க்காய் தன்னுயிரீந்த மாபரனார்
மகனை ஈன்ற தாய்மரியும் எம் தாயானார்
சத்திய வேதம் என்றுமே நிலத்திடுமே
நித்தியமாய் பதித்திடுவோம் மனத்திடையே

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading