12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
நேவிஸ் பிலிப்
கவி இல(67). 04/08/22
அன்றும் இன்றும்
அன்று
அளவுக்கு மிஞ்சிய பணமும்
அடங்காத் திமிரும் ஆணவமும்
அளவிலா நோயும் கண்டதில்ல
அடுத்தவர்க்கு உதவும் எண்ணமுடன்
பெருகியே தழைத்து செழித்திருந்த உலகு
உண்மையை ஓங்கி உரைத்து
ஊக்கமாய் விரும்பி உழைத்து
உணவே மருந்தாக அளவோடு உண்டு
வளமோடு வாழ்ந்திருந்த மக்கள்
நிழல் படர்ந்த சோலைகள்
நீள் பயண பாதங்களுக்காய்
நீளக் காத்திருக்க காலாற நடந்த சென்று
உடல் நலம் பேணியே காத்திட்ட மனிதர்
இன்று
பகட்டுக்கு வாழ்ந்து பயனிலா பொருள் சேர்த்து
திகட்டும் அளவுக்கு உணவினைத் தினம் உண்டு
மருந்தே உணவாகி உடல் நலம் தொலைத்து
தளர்வோடு வாழ்கின்றனர் ஆயுளைக் குறைத்து
அறிவை வளர்க்கும் ஊடகங்கள் மௌனிக்க
காக்க வேண்டிய அரசுகள் களவாட
விடியலுக்காய் ஏங்குகின்ற மக்களினம்
தெருவோரம் காத்துக் கிடக்கு வரிசையிலே..

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...