கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல (75) 29/09/22
பாகம் +பிரி+வினை
யார் பிரிப்பது எதை ஏன் பிரிப்பர்?
வேதனைகள் சோதனைகள் பிரித்திடுமோ
வியாகுலமோ வியாதிகளோ
கடன் தொல்லைகள் பிரித்திடுமோ

கஷ்டங்கள் நஷ்டங்கள்
பழிச்சொல்கள் கவலைகளும்
உணர்வுகளும் பொறாமைகளும்

பகைமைகளும் எதிர்ப்புகளும்
உறவுகளைப் பிரித்திட
பந்தங்களும் பாசங்களும் அறுந்து போக
பாசத்து உறவுகளின் பரிதாபக் காட்சி

அசையும் சொத்து அசையா சொத்தென
எலும்புக்கு அடிபடும் நாய்கள் போல
ஏட்டிக்கு போட்டி கேட்படி

தனியாய் நின்ற அபலைத் தாய் கேட்டாள்
நான் யாருக்கென
எனக்கு எனக்கு என
விரிந்த வாய்கள்
உனக்கு உனக்குக்கு என குவிந்தன.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading