புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

பங்குனி -சிவரஞ்சினி கலைச்செல்வன்-

சந்தம் சிந்தும் சந்திப்பு 254
“பங்குனி மாதம்”

பங்குனித் திங்கள் அம்மனின் சிறப்பு
எங்கும் அம்மன் பொங்கல் காணும்
பன்றித்தலைச்சி அம்மன் கோயில்
பக்தர்கள் கூடும் பங்குனி திங்கள்
பங்குனி மாதம் திருமண காலம்
முகூர்த்த வேளை பல நாள்
கூடும்
பங்குனி மாதம் பிறந்தால் வேள்வி
எங்கும் தொடங்கும்
கிடாக்கள் பலிக்கு
தயாராய் வளரும்
பங்கு இறைச்சி
போடும் வழக்கம்
ஊரில் வேள்வியில்
நித்தம் நடக்கும்.
விதைப்பும் நாத்து நடுகையுமாக
வகை வகை காய்கறி
செடிகள் உண்டாக்கும்
மாதம் பங்குனி
வெயில் காலம்
வெகுவாய் கூடும்
குரும்பை கள்ளு
ருசிப்பவர் ஏங்க
பனைகள் கொடி
ஏறும் மாதம்.
பங்குனி மாதம்
பலதும் கூடும்
பங்குனி வேள்வி
பங்கு இறைச்சிக்கு
எங்கள் வீடும்
எதிர்பார்திருக்கும்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading