பசுமை

சுமித்ரா தேவி

கவிதை இல 18
தலைப்பு . பசுமை
மேகத்தாள் துகில் விலக
கதிரவன் கண் மயங்க
மின்னலில்
வானம் சிலிர்க்க
முழங்கிய
இடியினில்
பார்மகள் விழிக்க
பூமழை
தொடுத்தாள்
கார்மகள்
களித்தாடி மகிழ்ந்து
கண் திறந்தன
பசுமை
சுமித்ரா தேவி (மித்திரா)
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading