26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
“பள்ளிப்பருவத்திலே”..!!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை அணைத்து மகிழ்ந்தோம்..
சிட்டுக்குருவி போல் கதைகள் பேசி
பட்டுச் சிறகென உவகை கூடி
கலைகள் பாதி கல்வி மீதி
கணக்கும் சேர்த்துக் கற்றோம்..
ஆசிரியர் சொல் கேட்டு நடந்து
அப்பப்போ பிரம்படி பரிசாய் வாங்கி
பலவும் அறிந்து பழகிக் கொண்ட
பள்ளி நாட்கள் மேன்மை அன்றோ..
கால நேரம் கடைப்பிடித்து
கல்வி மீது ஆர்வம் காட்டி
உடற்பயிற்சி விளையாட்டு என்றும்
போட்டிகள் போட்டு வென்றும் நின்றோம்..
பள்ளிப் பருவம் உயர்த்தியது அன்று
அள்ளியே வாழ்வை அளித்தது இன்று
அத்திவாரம் பலமாய் போட்டால்
கட்டட வாழ்வு தழைத்தது சிறப்பே..
சிவதர்சனி இராகவன்
21/5/2025

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...