” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152

“பள்ளிப்பருவத்திலே”!!

கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை அணைத்து மகிழ்ந்தோம்..

சிட்டுக்குருவி போல் கதைகள் பேசி
பட்டுச் சிறகென உவகை கூடி
கலைகள் பாதி கல்வி மீதி
கணக்கும் சேர்த்துக் கற்றோம்..

ஆசிரியர் சொல் கேட்டு நடந்து
அப்பப்போ பிரம்படி பரிசாய் வாங்கி
பலவும் அறிந்து பழகிக் கொண்ட
பள்ளி நாட்கள் மேன்மை அன்றோ..

கால நேரம் கடைப்பிடித்து
கல்வி மீது ஆர்வம் காட்டி
உடற்பயிற்சி விளையாட்டு என்றும்
போட்டிகள் போட்டு வென்றும் நின்றோம்..

பள்ளிப் பருவம் உயர்த்தியது அன்று
அள்ளியே வாழ்வை அளித்தது இன்று
அத்திவாரம் பலமாய் போட்டால்
கட்டட வாழ்வு தழைத்தது சிறப்பே..
சிவதர்சனி இராகவன்
21/5/2025

Nada Mohan
Author: Nada Mohan