சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பவானி மூர்த்தி Swiss

எழுத்தின் வித்தே, பூத்தெழும் தமிழே

எழுத்தின் வித்தாய் எழுவாய் தமிழே
—– எங்கும் ஒலிக்கும் என்றன் தமிழே .
பழுத்த கனியாய் பண்பில் சுவைப்பாய்
—– பாரில் ஓங்கிப் பருவம் பார்ப்பாய் .
விழுந்த இடத்தில் விதையாய் முளைப்பாய்
—— விருட்சம் நீதான் விரைந்து வளர்வாய் .
முழுதும் போற்ற முத்தம் இடுவாய்
—– முத்தாய் மின்னி முகப்பாய் நிற்பாய் .

ஒழுக்கம் தன்னை ஓதும் தமிழே
—– ஒன்றும் மக்கள் ஒன்றச் செய்வாய்
இழுக்கோ உனக்கும் இல்லை இல்லை
—– இன்சொல் தானே உன்றன் எல்லை .
விழுப்பம் தரவே விரைந்து வாராய்
—— வீடும் நாடும் விரவி வாராய் .
எழுத்தும் வித்தும் என்றும் இணைய
—— ஏற்றம் பெற்றாய் என்றன் உயிரே .

Nada Mohan
Author: Nada Mohan