மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

பாலதேவகஜன்

வசந்தம்

நீ தந்த வசந்தம் என்
நினைவோடு இருந்து
நீளும் என் துயரை
நிறுத்திய சில கணம்
நீண்ட கணங்களாய்
நிலைத்திட வேண்டும்.

எத்தனை எத்தனை சுகங்கள்
அத்தனையும் நினைவாய்த்தான்
நிலைக்குமென்று நினைக்கவில்லை
உயிர் காத்திடவே உனை பிரிந்தேன்
உயிரிருந்தும் உணர்வற்றவனாய்
வாழ்வேன் என்ற நிலையறிந்திருந்தால்
உன்மடியிலேயே எனதுயிரை
மாய்த்து விதையாகியிருப்பேன்.

அறம் காத்து உறுதியோடு
உனையே நேசித்த எனக்கு
புறமுதுகு காட்டி ஓடவைத்த
பொல்லாத காலம்.
புகலிடம் கோரிக்கை புறக்கணிப்போடு
புலம்பும் என் வாழ்வு.
துலக்கியது உன் புலமையை தாயே!

மீண்டும் என் வாழ்வில்
வசந்தமே! இல்லையென்ற
நிலை மாற வேண்டுமாயின்
மீண்டும் உன் மடி சாய்ந்தாலன்றி
மாற்று வழியே இல்லை எனக்கு.
உன்னை பிரிந்து வாழும்
என் வாழ்வின் வலிகளை
ஊடறுத்து வெளியில் வர
என்னால் முடியவில்லை
எனதுயிர் தமிழீழத்தாயே!

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading