13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
பாலதேவகஜன்
வசந்தம்
நீ தந்த வசந்தம் என்
நினைவோடு இருந்து
நீளும் என் துயரை
நிறுத்திய சில கணம்
நீண்ட கணங்களாய்
நிலைத்திட வேண்டும்.
எத்தனை எத்தனை சுகங்கள்
அத்தனையும் நினைவாய்த்தான்
நிலைக்குமென்று நினைக்கவில்லை
உயிர் காத்திடவே உனை பிரிந்தேன்
உயிரிருந்தும் உணர்வற்றவனாய்
வாழ்வேன் என்ற நிலையறிந்திருந்தால்
உன்மடியிலேயே எனதுயிரை
மாய்த்து விதையாகியிருப்பேன்.
அறம் காத்து உறுதியோடு
உனையே நேசித்த எனக்கு
புறமுதுகு காட்டி ஓடவைத்த
பொல்லாத காலம்.
புகலிடம் கோரிக்கை புறக்கணிப்போடு
புலம்பும் என் வாழ்வு.
துலக்கியது உன் புலமையை தாயே!
மீண்டும் என் வாழ்வில்
வசந்தமே! இல்லையென்ற
நிலை மாற வேண்டுமாயின்
மீண்டும் உன் மடி சாய்ந்தாலன்றி
மாற்று வழியே இல்லை எனக்கு.
உன்னை பிரிந்து வாழும்
என் வாழ்வின் வலிகளை
ஊடறுத்து வெளியில் வர
என்னால் முடியவில்லை
எனதுயிர் தமிழீழத்தாயே!

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...