சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பாலதேவகஜன்

இறைவா!
எண்ணி எண்ணி ஏங்குதற்கா
எங்களை நீ! படைத்தாய்
என்றுமே தீராத
எத்தனை எத்தனை வலிகள்
எங்களை ஆளுகின்றது.

கஸ்ரப்பட்டு உழைச்ச காசில்
காணி ஒன்னு வாங்கி விட்டன்
வாங்கிய காணியில்
வாழும் முன்பே
வலுத்த சண்டையில்
இடமும் பெயர்ந்தேன்.

பேணி பேணி
பார்த்த காணிய
பிரியமறுத்து
விறைச்சு நின்றேன்.

ஆமி வந்து ஆக்கிரமிச்சு
அரசமரத்த நட்டு வைக்க
புத்தர் சிலை எழுந்தது
எந்தன் நிலை குலைஞ்சது.

எத்தனை கனவோடு
வாங்கிய காணியில்
விகாரை பிறந்தது
என் கனவு பறந்தது.

வலிந்து கொண்டவன்
வலிமையோடு இருக்கிறான்
நாளும் எம் காணிகள்
சிங்கள குடியேற்றங்களாகின்றது
எவர் தடுக்க முடியும்
எல்லாம் எம்மினத்தின் சாபம்.

Nada Mohan
Author: Nada Mohan