புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

பால தேவகஜன்

சதி வலைக்குள்
எம் இனம்!
சகித்திட முடியாத
இவன் மனம்!
சத்திய வேள்விக்கு
தன்னை ஆகுதியாக்க
தயாராகி நின்றான்
புலிவீரன் பார்த்தீபன்!

நல்லூரான் வீதியில்
ஊரெழு பிள்ளை!
உண்ணா நோன்பென்ற
உன்னத தியாகத்தை
உணர்வோடு தொடர்ந்தான்.

பன்னிரு நாட்கள்
நீரின்றி உணவின்றி
பெருகிய வலியோடு
போராடி மடியும்வரை
நல்லூரான் நல்லருளும்
மருகியே போனது.

அமைதிப் படையாகவந்த
இந்திய இராணுவம்
செய்ததோ பாதகம்.
அகிம்சை தேசமென்று
தன்னை அடையாளப்படுத்தும்
இந்திய தேசம்
எம்மிடம் போட்டதோ
பெரும் வேஷம்.

கோரிக்கை ஐந்தோடு
அறப்போர் தொடுத்தவன்.
வேடிக்கை பார்த்தோரை
வியப்பில் ஆழ்த்தியவன்.
தியாகமென்றால் இதுவென்று
தியாகத்துக்கே சொன்னவன்.
விழி மூடிய தருணம்
நல்லூர் வீதியெங்கும்
கண்ணீரால் தோய்தே கிடந்தது.

ஊரெழுவில் பிறந்த
ஈழத்தின் சொத்திவன்.
மருத்துவத்துறை மணாவனாய்
மலர்ந்திருக்க வேண்டியவன்
மகாத்மாவையே ஓரம்கட்டி
தியாகத்தில் உச்சம் பெற்றான்.

பார்த்தீபா! நீ!
வேண்டிய விடுதலை
ஈழத்தில் இன்னும்
தீராமல்தான் இருக்கின்றது
ஆனால் நீ! செய்த தியாகம்
அதை அழியாது காக்கின்றது.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!
சுதந்திர தமிழீழம் மலரட்டும்!
என்ற உணர்வுமிக்க வரிக்காக
உனது உயிரையே தந்தவா!
உனது தியாகம்!
உனது கனவு!
உனது இலட்சியம்!
என்றோ ஓர்நாள் பலிக்கும்
அன்றே ஈழமும் மலரும்.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading