புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

பால தேவ கஜன்

உயிராக நேசித்த தாய் மண்
தகுதியிழந்து தராதரமிழந்து
தறுதலைகள் கட்டுக்குள்
கதிகலங்கி நிற்கும் நிலை கண்டு
நெஞ்சத்தில் தீ! மூண்டதடா.

ஆவாவும் மாவாவும் ஆட்டம்
அதை அடக்க
ஒருவருக்குமில்லை நாட்டம்.
அரசியல் வாதிகளுக்கோ
பதவிகள் மேல் நாட்டம்.
மக்களோ பெரு வாட்டம்.
தேர்தலுக்காய் ஒரு கூட்டம்.
தேவை கேட்டால்
தெறிக்க ஓட்டம்.
எங்கள் தேசத்து நிலை காண
தேகத்தில் தீ! மூண்டதடா.

காவலுமில்லை
கட்டுப்பாடுமில்லை
ஒற்றுமையாய் பயணிக்க
ஒருவருக்கும் மனமுமில்லை
இதில் எங்கே நாம் உரிமை! பெற
எத்தனை எத்தனை தியாகங்கள்!
அத்தனையும் பயனின்றி
போனதை எண்ண எண்ண
நெஞ்சத்தில் தீ! மூண்டதடா.

தாறு மாறாய் கடனை வாங்கி
கூறு கூறாய் நாட்டை விற்று
பேறு இன்றி ஆக்கிவிட்டான்
கூறுகெட்ட சிங்களவன்.
தேறிவர தென்புமில்லை
தேற்றிக்கொள்ள தேர்ச்சியுமில்லை
வீழ்ச்சி நோக்கிய திசையில்
விரையுதெங்கள் நாடு
விடுதலை என்ற திண்ணம்
மூண்ட தீயில் அழிந்த காடாய்
வண்ணம் இழந்தே கிடக்கு.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading