கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

பாவை—“பாமுக பூக்கள்”

இருபது எம் கவிஞர்
இள மொட்டு கவிகள்
வரும் அவர்கள் கவி வார்தல்
வாரம் எந்தன் கடமை
பதிப்பில் அவர் ஆக்கம்
பரவுமெனில் ஊக்கம்
அதிகரிக்கு என எழுந்த
ஆர்வம் நூல் ஆக்கம்
**
வெளியாகி வந்து வெளியீடும் கொண்டு
எழுத்தாளர் சங்க அறிமுகமும்
கண்டு
கவியாளர் உள்ளம்
ஆனந்த வெள்ளம்
உவகையில் என் இதயம்-கவி
உறவுகளின் உயர்வில்
***
பட்டி வந்து சேராத
குட்டிகளை தேடும்
பாணியில் என் கண் இணைவோர்
கவிதைகளை தேடும்.
கொட்டி அவர் குவிக்கின்ற
வரிகளிலே வழியும்
கொஞ்சு தமிழ் எழிலை மனம்
பருக நாடி ஓடும்
கட்டு பணம் மாடி மனை
வாகனங்கள் ஜம்பம்
காட்டிடாத மகிழ்வை அவர்
கவிதை என்னுள் தூவும்
விட்டு உயிர் போனாலும்
எந்தன் சந்த உறவீர்
வேகையிலும் எந்தன் உடல்
உம் நினைவில் ஊறும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading