புதிர் 98

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-01-2026

அறிவின் கூர்மையைச் சோதித்து
அறியாமை இருளைப் போக்கி
குழப்பம் செய்வது எனது பணி
கூர்மை அறிவு கொண்டு கவனி

புரியாத புதிராய் எனக்குள்ளே
பல அத்தியாயம் என்னுள்ளே
விடை தெரிவது போலிருக்கும்
வினாவிற்குள்ளே மறைந்திருக்கும்

சிந்தனை எனும் உளியால்
சிறுகச் சிறுக செதுக்கிப் பார்
கல்லாய் இருந்த என்னுள்ளும்
கற்பனை அறிவு பெற்றிடுவாய்.

வினவியவரை புதிராய்
விடை தெரியாதவரை மர்மமாய்
தண்ணீரில் பிறப்பும் இறப்பும்
தரமானவன் சமையலுக்கு யாரிவன்?

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading