புனிதா கரன் கவிதை 03 UK

தலைசாய்ப்போம் மனிதம்
நிமிர வாழ்ந்தவர்க்காய்//
ஒடுக்கப்பட்ட பேச்சுரிமை
தரப்படுத்தப்பட்ட கல்விமுறை//
பல வழிகளில்
பறிக்கப்பட்ட உரிமைகள்//
அறவழிப் போராட்டம்
அத்துமீறிப் போகவே//
ஆயுதம் ஏந்தியே
அன்றாடம் போராடினர்//
காடுமேடு பொருட்டல்ல
காலநிலை பார்க்கவில்லை//
தன்னினத்தின் மீது
கொண்ட விருப்பினாலே//
தன்னைப் பற்றிய
சிந்தனை இல்லை//
ஊணுறக்கம் இன்றி
உறவுகளை மறந்து//
உரிமைகளை மீட்டிடவே
விதையாகி போனார்களே//
வீசும் காற்றும்
வேதனையைச் சொல்லுதே//
குருதி வடிந்தமண்ணோ
குமுறி வெடிக்குதே//
இன்னலைப் பொறுத்திடா
இயற்கையும் சீற்றம்கொள்ளுதே//
தன்னலம் கருதா
தமிழ் வீர்ர்கள்//
எல்லோர் நினைவிலும்
என்றும் வாழ்கின்றனர்//
ஏற்றிய தீபத்தில்
எழிலாய் சுடர்விடும்//
மாண்புடன் மனிதநேயம்
மாசற்று வாழ்கவே//

புனிதா கரன்
கவிதை 03
UK

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading