புன்னகை

ராணி சம்பந்தர்

சில்லென்ற மேனி சீதனமாய்
நழுவும் மெல்லிய இனிமையில்
தழுவும் புன்னகை உதடுகளில்
ஒட்டாது ஒட்டித் தூக்குவிக்கும்

வல்லவனுக்குப் புல்லும் சாதனம்
கல்லையும் கனிய வைக்கும் இது
நல்லதைக் கொட்டும் நூதனமது
வல்லமை காட்டி வேதனமாக்கும்

இல்லாத பொய் கன்னம் சிவக்கவே
பொல்லாத கொடூர எண்ணம் பிறக்க
அல்லும் பகலும் மனமும் சுமக்கவே
கொல்லும் புன்னகை தொக்கினிற்கும்

சொல்லத் துடிக்கும் தொல்லைகளிலே
மல்லுக் கட்ட வெடிக்கும் சில்லெடுப்பில்
பல்லைக் காட்டிச் சிரிக்கவே முடியாமல்
முள்ளாய்க் குத்தும் மௌனம் புன்னகை.

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading