புன்னகை

ஜெயம்

உலகத்தில் எளிய விலையுயர்ந்த பரிசு
அழுகின்ற உள்ளத்தின் அமைதிக்கு மருந்து
கண்ணீரை தடுக்கின்ற வல்லமை இதற்குண்டு
புன்னகையால் மறைந்திருந்த வலிகள் விலகுவதுமுண்டு

படிந்த துயரம் மனதிலிருந்து எடுபடும்
சிரிப்பொன்றாலே வசந்தமாய் வாழ்க்கை கட்டப்படும்
மருத்துவமில்லாமல் காயத்தை புன்னகையும் ஆற்றிவிடும்
கடுமையான வாழ்க்கைகுள்ளும் சுகத்தை ஊட்டிவிடும்

உதடுகளில் மலரும் அழகிய அற்புதம்
சிரிப்பொன்றே வாழ்நாளை ஒளிமையமாக்க போதும்
புன்னகை மனிதர்களை பரஸ்பரம் இணைக்கும்
புன்னகை நண்பனென பகைவரையும் அணைக்கும்

புன்னகை மானுடரின் வரவேற்பு மொழி
பொன்னாக நேரத்தை மாற்றிவிடும் புன்னகைத்துளி
மனிதனின் உயர்ந்த பண்புகளில் ஒன்று
கனிவான புன்னகை காலத்திற்கும் நன்று

Author:

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading