தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

பூக்களின் வசந்தம்

பூக்களின் வசந்தம்

வசந்த காலம் இன்பம் பொங்கும்
வகை வகையாய் பூக்கள் பூத்துச் சொரியும்

மிகையாகவும் கொள்ளை அழகும் பேருமே

பூக்களின் வாசம் புது வசந்தத்தை வீசவைக்கும்

நன்மையோ தீமையோ வேறுபாடும் இல்லையே பூவிற்கு

இறைவன் பாதத்தில் இறைஞ்சுவதும் பூவே

மங்கையர்கள் கொண்டையிலே மலர்வதுவும் பூவே

மணமாலை சூடவும் மார்பினிலே ஆடுமே

மானிலத்தில் நீயும் இல்லையெனில் மலர்வும் இல்லையே

காலத்திலே வசந்தமாகக் காரிகையே வலம்வருவாய்

பூஜிக்க வேண்டியவளே புனிதம் நிறைந்த மலரும் நீயே

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan