சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

பேரிடர்

ஜெயம்

வானம் கிழிந்து மழை கொட்டியதே
ஞாலம் நிறைந்து நீர் முட்டியதே
புயலென மாறிய காற்றதன் சீற்றம்
இயற்கையின் கோர தாண்டவ ஆட்டம்

நீர்வெள்ளத்துள் கிராம் மூழ்கி அழியுது
பார்க்காது மழையும் பேயாய் பொழியுது
காலனாய் மாறிக்கொண்டதே பயங்கரப் புயல்
பாழாய்ப்போன சூறாவளியின் மாய்த்திடும் செயல்

பேரிடர் ஒன்றால் பூமி கொந்தளித்தது
பாரின் மேலே உயிரும் தத்தளித்தது
அடியோடு பாறி மரங்களும் சாய்தன
குடிசைகள் மூழ்கி நீருக்குள் கரைந்தன

பேரிடர் தந்த வலிகளை நீக்க
பிரிவினை மறந்து மனிதமும் பூக்க
அந்த இருட்டிலும் ஒரு ஒளி
சிந்தவே பிறந்தது கருணையின் வழி

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading