பேரிடர்….

வசந்தா ஜெகதீசன்
பேரிடர்..
இயற்கை அனர்த்தம் பாதிப்பாய்
இயல்பு வாழ்வு மாற்றமாய்
அவலம் சூழ்ந்த பொழுதுகள்
யாரும் யாருக்கும் உதவாது
உயிரின் காப்பே முனைப்பாக
உறவுகள் துடிப்பில் உதிரமே கொதித்தது
மண்ணின் சரிவு பாலங்கள் உடைப்பும் வெள்ளத்தில் அள்ளுண்டு அகப்பட்ட உறவுகள் அலறல் வலியும்
இயற்கையின் இடரில் இதயமே நொறுங்கிட
உதவிடும் நேயத்தில் எத்தனை மனிதம்
உயிர்களை காத்து
உறவுகள் பேணி வாழ்வியல் அழித்திடும் முறைமையே நேயம்
அகங்களை திறந்து அவலத்தை உணர்ந்து கரமது இணைப்போம் காலத்தில் செய்திடும் உதவியே ஞாலத்தில் பெரிதன்றோ!.. நன்றி
மிக்க நன்றி

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading