சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பொங்குவாய்

சிவாஜினி சிறிதரன்
சந்தகவி இலக்கம் _216

“பொங்குவாய்”
தை திங்கள் வந்ததடி தோழி
தரணிமெல்ல மகிழ்ந்தடி
ஆதவனார் வந்தாரடி!

பொங்கலிட்டோம்
பூஜை இட்டோம்
புது நெல்லில் படைத்து நின்றோம்!

புத்தம் புதுமலராய்
நித்தம் நித்தம் மலர்ந்து வரும்
ஆதவனின் வருகை
பாரெல்லாம்
ஒளி கூட்டும்!

பொங்கலோ
பொங்கலேன்று வையகத்து மாந்தரெல்லாம்
புதிய பானை பொங்கலிட்டு பொங்கிடுவாய்!

வாழ்வாங்கு வாழ்ந்திடவே
பொய்யகற்றி மெய்யுணர்ந்து தாழ்பணிவோம்
ஞான ஒளி தரும் ஆதவனை!

வறுமை பகைமை வஞ்சகம் நீக்கி
உறவுகள் உயர்ந்து
பண்டம் பலவும் நிறைந்து
இல்லறம் இனிக்க
இன்பம் பெருகிட
இனிதே பொங்குவாய்!
நன்றி

Author: