இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம்.
*** குடுமி வாத்தியார் ***
———+———
நெற்றியிலே, நீளமான திருநீற்றுப் பட்டை .
நீளக் கைகொண்ட , நடுத்தர ரகமான சட்டை .

முன்புறம் வழித்தெடுத்த , பாதி வழுக்கை மண்டை .
பின்புறம் வடம் சுற்றினாற் போல , சரிந்து ஆடும் , அவர் கொண்டை .

பழுத்த சைவம், பரம்பரைப் , புகழ் பூத்த , பெரும் பிரசங்கி .
பலநூறு பாக்களுக்கும்,பயன் சொல்வார் அவர் , முழங்கி .

தொன்மைத் தமிழைத், துலங்கவே வைக்கும் , இதயத்தின் துடிப்பு .
வன்மையற்ற , வாயாடித்தனம் , வார்த்தையாலே விளையாடும், இலக்கணக் கோர்ப்பு .

அஞ்சா நெஞ்சுடையார், அகம்பாவம் ஏதும் அறியார் .
சொல்லால் சுட்டுமிலார், சுரண்டுவதை , அறிந்துமிலார் .
கல்லாரைக் கண்டாலும் , கடுகளவும், நிலை மாறார் .
பொல்லாரைக் கண்ணடாலும் ,தன், படி விட்டு , இறங்க மாட்டார் .
குடுமி வாத்தியார்
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading