பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவி நேரம்.
இல.520
இயற்கை.
*************
ஆண்டவன் கொடையினிலே, அழகிய தோற்றங்கள்.
அதிசயப் படைப்பினில் , அதற்குள்ளும் மாற்றங்கள்.

அறிந்தும், அறியாததுமாய், எண்ணற்ற , விசித்திரமான தோற்றங்கள்.
அவனியைக் காக்க வந்த அவதார தெய்வங்கள்.

எண் சாண் உடம்பினுள்ளே, உயிர் துடிக்க, உதவி நிற்கும்.
ஒட்டுகின்ற நோயதற்கும், எட்டிப்போக, மருந்தளிக்கும்.

சுட்டித் தனத்தாலே , சிறுகுறும்பும், செய்ய எண்ணும்.
வட்டி , முதலோடு, வாரியும் தான் கொண்டு செல்லும்.

** இயற்கை**
பிறக்கும் நாளினை, ஏட்டிலையும் குறித்து வைக்கும்.( ஆனால்)
இறக்கும் நாளதனை, மர்மாக மறைத்து வைக்கும் .

பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading