பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம்.
இல.526
***** சித்திரை*****
சித்திரையாள் வருவாள், முத்திரை பதிப்பாள்.
சத்தியமாய் அவள், சர்வமும் காப்பாள்.

சுற்றிடும் இடர்களை, வெட்டியே எறிந்திடுவாள்.
சுகந்தமாம் வாழ்விற்குத் , தூபமும் இடுவாள்.

வெற்றிகள் குவிக்கவே, வழிகாட்டியாய் நிற்பாள்.
வீணரின் செயலுக்குத், துறட்டியாக இருப்பாள்.

நயமது கிடைக்கவே, நாற்றிசையும், நல்மாரி பொழிவாள்.
தனம் , தானியம், யாவையுமே , தாராளமாகச் சொரிவாள்.

மனம் வைத்தே மகிழ்வோடு, உலகிற்காய் உழைப்பாள்.
மதிநுட்பத் திறனாலே, மகுடத்தை ஏற்றுவாள்.
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading