போரிடர்

ராணி சம்பந்தர்

பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?

நூறிடர் வருமெனக் கூறிடர்
எவரோ அவர் சாபந்தானோ
ஊறிடும் கார்த்திகைப் பூவில்
உறிஞ்சிடும் மழை நீர் மோகமா

உதிரம் கரைந்தது கூறிடுமே
கல்லறைப் பூக்களின் மண்
அரிஞ்சிடும் கண்ணீரே என
கார்கால விண்மேகங்களே
மானிடரில் ஏனிந்த மோகம்

ஒவ்வோர் வருடப் புதுப் பெயர்
இவ்வருடத் திட்வாவோ தீவிரம்
ஊரெல்லாம் அல்லோலம்
வேரறுந்த மரம் அலங்கோலம்

இடைமுறிந்த வாழை ஊர்கோலம்
மண் சரிந்த புதைகுழி பலிகோலம்
இன்றும் துரத்தும் இயற்கைப் பசியே
இன்னுமின்னும் தீரவில்லையா
உன் தாகம் .

Author:

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading