மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மகிழ்ச்சியின் ஓசை

ஜெயம்

வாழ்க்கையின் பாதையில் சின்ன சிரிப்புகள்
வாழ்நாள் பரிசாகும் மகிழ்ச்சியின் வரவுகள்
பாசத்தின் தொடுகை பகிர்ந்திடும் அதனை
நேசத்தின் வண்ணம் மலர்விக்கும் இதனை

வீசும் காற்றும் மலர்தொட்டு மகிழ்ச்சி
பேசும் பறவைகள் காதலால் மகிழ்ச்சி
அலையும் அலையும் கரைகண்டு மகிழ்ச்சி
மழைகண்டு உயிரினம் அசைந்தாடி மகிழ்ச்சி

மனமதில் மலர்ந்திடும் மகிழ்வெனும் சுகம்
தினத்துக்குள் சந்திக்க நிம்மதி உருவாகும்
மகிழ்ச்சி ஒரு சிறந்த கதை
மகிழ்வெனும் உணர்வே உற்சாக விதை

இதயத்தில் தோன்றினால் சந்தோச ஒளி
உதயமாம் அங்கே மகிழ்ச்சியின் வழி
இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் மகிழ்ச்சி
உயரிய உள்ளங்கள் உறவானால் மகிழ்ச்சி

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading